யாரு சார் இவரு?

vivekanandar

இந்தப் பதிவு நான் எழுதியது அல்ல!

விவேகானந்தரை இத்தனை எளிமையாக அறிமுகப்படுத்த முடியுமா? நான் படித்து படித்து ரசித்ததை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

இதை எழுதியவர் திரு மோகனரங்கன் V. ஸ்ரீரங்கம். என்னுடைய மனமார்ந்த நன்றி அவருக்கு உரித்தாகுக!

இன்னிக்கு ஒரு நீண்ட பயணம் ஆட்டோவிலேயே. உடல் நலம் சரியில்லை. மனமோ அதிதீவிரமாக யோசனை. அங்கு இறங்கி இங்கு அலைந்து ஓடிப் பிடித்து வீட்டுக்கு வர மிகவும் அலுப்பு. சரி பேசாமல் ஆட்டோவில் விடு சவாரி என்று வரும் பொழுது ஒரு சுவாரசியமான விஷயம்.

வழி நெடுக ஏகப்பட்ட பானர்கள். விவேகாநந்தரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு சாலையில் மத்ய ரேகையில் வரிசையாக. என்ன விஷயம் என்று யோசிப்பதற்குள், ஆட்டோக் காரர், ‘யார் சார் இவுரு?’

விவேகாநந்தரைத் தெரியாது! விவேகாநந்தரை அறியாமல் எப்படி ஓர் ஆள் இந்தியராக…என்ற திடுதிப்பு மனத்தில் உந்த ஏதோ சொல்ல வாயெடுக்குமுன்… என் உயிர்த் தோழியான காளி எங்கோ என்னைப் பார்த்துச் சிரிப்பது போல் ஓர் உணர்வு. ஆயிரம் படிச்சு இருக்கலாம்..அதெல்லாம் இங்க உதவாது. எங்கே இப்படிக் கேட்கும் ஒருவருக்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா பார். முடியாதென்றால் நீ படித்து என்ன பயன்…

இன்னும் விட்டால் மானத்தை வாங்கி விடுவாள் போல் இருந்தது. சரி என்று ஒரு முடிவெடுத்தேன். இன்னிக்கு நானும் இவருக்குச் சரியாக இருந்துதான் பேசுவது என்று. சும்மா வித்தகம் எல்லாம் காட்டக் கூடாது. சொல்றதுல முழுக்க அவரு கூட வர முடியணும், கருத்து முடியும் வரை. ஒன்றுல இரண்டு பார்த்துட்றது. காளிட்ட சேலஞ்ச் போட்டுத் தோத்துப் போனாலும் அது பரம இனிமை அல்லவா…

ஆனால் இந்த ஆட்டோக் காரர் என்னை சும்மா சதாய்க்க வேண்டி இப்படிக் கேட்கிறாரா அல்லது நிஜம்ம்மாலுமே தெரியாதா….யோசிப்பதற்குள்… அவரே..

எந்தக் கட்சி சார் இவுரு….

இவரு விவேகாநந்தர்.

ஒரே இரைச்சல். ட்ராஃபிக்.

‘ஆமாம் இதில்தான் சொல்லியாகணும் நீ.’

இல்ல எங்க இருக்காரு….

இப்பொழுது நம் காலத்தில் இருப்பவர் இல்லை. 19ஆம் நூற்றாண்டு. சுதந்திரம் வாங்குவதற்கு எல்லாம் முன்னாடி…1893ல அமெரிக்காவில் உலகம் பூரா இருக்கற மதத்துலேந்து பலபேர்கள் சிகாகோ நகருல போய் அங்க நடந்த சர்வ மத மாநாடு ஒன்று, அதுல தங்க தங்க மதத்தைப் பத்திப் பேசினாங்க. உலக மக்களுக்கு தங்க மதம் என்ன என்ன பெருமை இருக்கு, எவ்வளவு சிறந்ததுன்னு எடுத்துச் சொல்ல. இவுரு ஹிந்து மதத்தோட பெருமையை உலக மக்கள் முன்னாடி எடுத்துச் சொல்ல போனாரு. இங்க சென்னைலேந்துதான், அப்ப இங்க படிச்சிக்கிட்டு இருந்த காலேஜ் பசங்கதான், பெரிய பெரிய டாக்டருங்க, வக்கீல்கள், பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து இவரைக் கப்பல் ஏத்தி அமெரிக்காவுக்கு அனுப்பிச்சாங்க.

அப்படியா? சென்னைக் காரரா?

கல்கட்டாகாரரு வங்காளி. அங்க கல்லூரியில் பெரும் படிப்பு படித்துவிட்டு, கடவுள்னா என்னன்னு தெரிஞ்சுக்கணும், அப்படி ஒன்று இருந்தா நேரடியாகவே பார்த்துடணும்னு தீவிரமா கிளம்பி பல பேர்கிட்ட போயி கேட்டுருக்காரு. அல்லாம்…யார் கண்டா? அப்ப்டீன்னு சொல்றாங்க…யாரு பார்த்தது?..பார்க்கல்லாம் முடியாது… பெரியவங்க அந்தக் காலத்துல சொல்லியிருக்காங்க…நம்பணும்..அப்படி இப்படின்னு சொல்லியிருக்காங்க…

சார் பயங்கராமா நிக்குது சார்…படு ட்ராஃபிக்கு… அப்படிக் கொஞ்சம் சுத்தி போயிடவா? கூட்டம் இருக்காது…

ஆங்..போங்க…

அவ்வளவுதான்.. இந்தப் பக்கம் வந்துட்டோம்னா ப்ரச்சனை கிடையாது…. அப்பறம் சார்…அவரு பார்த்தாரா….

யாரு பார்க்கலையேப்பா… நாம்தான் இப்படி வந்துட்டோமே…

இல்லை சார்… அவரு சொல்லிக்கிட்டுருந்தீம்ஹ்களே… விவேகாநந்தரு…

ஆங்.. அப்பறம் தேடிக்கிட்டே போகச் சொல்லொ…ராமகிருஷ்ண பரமஹம்ஸருன்னு ஒத்தரு அங்க காளி கோயில்ல பூசாரியா இருந்தாரு.. பார்த்தா நாம என்னப் படிச்சுருக்கோம்… இந்த ஆளு என்ன சொல்லப் போறான்…ஏதோ பூசாரியா இருந்துக்கிட்ட்ருககன்…நண்பர்கள்ளாம் சொல்ல சரி போய்தான் பாப்பமேன்னு போயிருக்காரு.. இவரு விவேகாநந்தர்ட்ட என்ன ஒரு சுபாவம்னாக்க…யாரைக் கண்டாலும் இந்த மாதிரி தெய்வ மனுஷாளைக் கண்டா உடனே ‘நீ கடவுளைப் பார்த்திருக்கிஆ?ன்னு கேட்ருவாரு. எல்லாம் ரிப்ளை நெகடிவ்தான்…

ஆமாம் யார் பார்த்திருக்கப் போறாங்க…

அதே மாதிர்தான் இவர்கிட்டயும் கேட்டாரு….பார்த்தாஅ… அந்தப் பூசாரி…அசால்டா சொல்டான்யா….’நானும் பார்த்திருக்கேன்… உனக்கும் வேணுமினா காட்ட முடியும்’னு… இவருக்கா பேஜாராப் போச்சு… இன்னாடா பண்றது… இந்த மனுசன் என்னடான்ன சுத்த பைத்தியக்காரன்கணக்கா இருக்கான்.,..ஆனால் ஒன்று… சும்மா சொல்லக் கூடாது…தூய்மைன்னா அப்படித் தூய்மையான ஆளு…. உள்ளம் கள்ளம் கபடே இலலம,..ஆசை, சூதுவாது ஏமாத்து ஒண்ணும் கிடையாது…அந்த மாதிரி நூறு பர்சண்ட் உள்ளத் தூய்மையான ஆளை ஜ்கன்மத்துல பார்த்ததுல்ல…சுமம அவனவன் வாயில ஒண்ணு சொல்றது செய்கைல ஒண்ணு காட்றது கேட்டா..ஆச்சா பூச்சான்னு ரீல் உட்றது.. அதெல்லாம் ஒண்ணும் கிடையாது இந்த ஆள்ட… அதுகாகவே போனாரு இவுரு அவுர்ட.. அடிக்கடி… சரி இவனும் சும்மா ஏமாத்தா பார்க்கலாம்னு… ஆனா பார்க்க் பார்க்க ஆளு சும்மா அசலு… ஒரிஜினலு….இம்மி குடா ஏமாத்து… பொருளாசை, பொண்ணுங்க ஆசை எதுவும் இல்லாத சுத்தமான அவரைப் பார்த்த உடனே இவருக்கே என்னடா நாம்ப படிச்சு இவ்வளவு பேரைக் கேட்டு.. என்ன இதெல்லாம்.. பாரு… மூணாம் கிளாஸ் கூட போகாத இந்த ஆளு… இவ்வளவு உள்ளும் புறமும் முழுக்க தூய்மையோட இருக்கான்… கவலையே படாம சொல்றான்… நான் கடவுளைப் பார்த்திருக்கேன்றான்…என்ன தெகிரியம்…வேணுமின்னா உனக்கும் காட்டுவேன்ங்கிறான்… என்ன நினைச்சுக்கிக்ட்டு இருககன் நம்மளை இவன்….இல்லை ஏதோ இருக்கு இவங்கிட்ட… இல்லாட்டி இப்படி நம்ம மனம் அவன்கிட்ட போய் ஒட்டிக்காது.. அப்[படீன்னு பழக ஆரம்பிச்சு…போகப் போக அவரால உண்மையா கடவுள்னா என்னா.. மதம் என்றால் என்னன்னு,..ஆன்மிகம்லாம் என்ன உண்மையில எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாரு…அவரும் இவரை அப்படி பழுக்க பழுக்கவுட்டு பக்குவமா எல்லாத்தையும் சொல்லி வச்சாரு..சூக்ஷுமலாம் சொல்லிக் குடுத்து கடவுள் அனுபவத்தையே கொடுத்தாரு…

அப்பறம் இவரு ராமகிருஷ்ணர் போன பிற்பாடு…அடசீ இந்த மாம்மூலான வாழ்க்கை கல்யாணம் குழந்தைகுட்டி கவலை இதெல்லாம் வேண்டாம்.. ஏதோ கடவுளோடத் திட்டம் இருக்கும் போலத் தெரியுது…நமக்கு ஒன்றும் புரியல்ல… நாம பாட்டுக்கு காடு மலைன்னு போயி தவம் தியானம்னு நம்ம வாழ்க்கையைக் கழிப்போம்…கடவுள் அனுபவம் ஒன்று போதும் நமக்கு.. சும்ம மத்த விசயம்லாம் நமக்கு எதுக்குன்னு ஊர் ஊரா திரிஞ்சுக்கிட்டு வந்தாரு…

அப்படியே சென்னைக்கு வந்து, இங்க சாந்தோம்ல தங்கியிருந்தாரு…அப்ப இங்க இருந்த காலேஜ் படிக்கற பசங்க பல பேரு என்னடா இது இங்கிலீஷ் பேசற சாமியாரு, சின்ன வயசுக் காரரு.. நவீன விஞ்ஞானம், கணிதம் சரித்திரம் எல்லாம் தெரிஞ்சுருக்கு… சாத்திரம் எல்லாம் அவருக்கு கைவந்த கலையா இருக்கு..ஆச்சரியாமா இருக்குன்னு போய்ப் பார்த்தாங்க அடிக்கடி..

யாரு இம்க்க சென்னைல?

ஆமாம்…போய்ப் பார்த்தா…இவரு என்ன சாதாரண சாமியார் மாதிரியா பேசறாரு… எல்லாம் என்ன சொல்வாங்க… ஏதோ கடவுள் பத்தி…இந்த மதம் அந்த மதம். இந்த தெய்வத்துகிட்ட பத்தியா இரு இப்படி நடந்துக்க உனக்கு இது கிடைக்கும் அது கிடைக்கும் ஒரு மண்டலம் பூஜை பண்ணு இப்படி எதுனாச்சும்தானே சொல்லுவாங்க… இவரு என்னாடான்னா புதுமை புதுமையா பேசறாரு….

ம்ஹாங்….

உங்களுக்கு உண்மையான தெய்வம் எதுன்னு கேட்டா…இந்தத் தேசம்… இந்த பாரத தேசம் இதுதான் உண்மையில கன்கண்ட தெய்வம்…இதுன்கிட்ட பக்தியா இருக்கிஆ சொல்லு…மத்த தெய்வத்த எல்லாம் தூக்கிக் கடல்ல போடு…நம்முடைய பாரத தேசம் அது ஒண்ணு போதும், அதுக்காக் உன் உயிரைக் கூட கொடுக்க தயங்காத… அதன் மேல பக்தில என்னிக்கும் குறையாத…

கல்லூரி மாணவர்களுக்குக் கேட்கணுமா… சும்மா ஜிவ்வுனு ஏறிக்கிச்சு…ச்ச சந்நியாசின்னா இவன் உண்மையான சந்நியாசிடான்னு எல்லாம் ஒரே எழுச்சி ஆயிட்டாங்க… இப்ப நீம்ங்க கேட்டா என்ன சொல்வீங்க.. எது நாத்திகம்னு கேட்டா என்ன சொல்வீங்க…யாருமே என்ன சொல்வோம்..

அதாவது….

அதாவது கடவுள் கிட்ட நம்பிக்கை இல்லைன்னா அதுதானே நாத்திகம்னு சொல்வோம்

ஆமா

இவரு சொல்றாரு… அடப்போய்யா..கடவுள்கிட்ட நம்பிக்கை இல்லாதவனை நாத்திகம்னு பழைய மதம்லாம் சொல்லுது ஆனால் உண்மையான நாத்திகன் யாருன்னு கேட்டா யாருக்கு தன்கிட்டயே நம்பிக்கை இல்லையோ அவன் தான்னு சொன்னாரு பாரு…இளைஞர்கள் எல்லாம் கண்ணு திறந்தா மாதிரி ஆயிடிச்சு…

நோஞ்சான் மாதிரி இரண்டு மூன்று இளைஞர்கள் அவர்கிட்ட வந்து எங்களுக்கு கீதை வகுப்பு எடுங்கன்னு கேட்டாங்க… அதுக்கு சொல்றாரு.. நீங்க கீதையைப் படிக்கறதை விட கால்பந்து விளையாடுங்க…மோக்ஷத்துக்கு இன்னும் உங்களுக்கு தகுதி ஏற்படும்னாரு..அவங்களுக்கா ஒண்ணும் புரியல்ல….சும்மா வீரம் நிறைஞ்ச வார்த்தையா வருது அவருகிட்டேந்து.

சும்மா வீணாப் போட்டு மனசைக் குழப்பிக்காதீங்க… ஒன்று தெளிவாப் புரிச்ஞ்சுக்குங்க… ஆன்மிகம், மதம் கடவுள் எதுவானாலும் ஒரே டெஸ்ட் — அது பலவீனத்தைத் தருதா? பலத்தைத் தருகிறதா? பலவீனத்தைத் தரும் எந்தக் கருத்தா இருந்தாலும் சரி அது என்ன ஆன்மிகம், கடவுள் பக்தி எதுவானாலும் சரி, பலவீனத்தைத் தந்தா அதை வெசத்தைத் தூக்கி எறியறா மதிரி எறிஞ்சுருங்க…எது உங்களை மேலும் மேலும் மனத்தில் வாழ்க்கையில் உடலில் பலம் உள்ளவர்களாக ஆக்குகிறதோ அதை மட்டுமே கைக்கொள்ளுங்கள். நீங்கள் கோழையாக இருந்து கொண்டு ஆத்திகரா இருக்கறதை விட தைரியம் உள்ள நாத்திகராக இருப்பது எவ்வளவோ மேல்.

பார்த்தாங்க அத்தனை பேரும்… பச்சையப்பன் ஸ்கூஇலில் ஹெட்மாஸ்டராக இருந்தவர் அழகியசிங்கம் ஐயங்கார்னு ஒத்தரு அவரு முழுக்க முழுக்க விவேகாநந்தரை எப்படியாவது அமெரிக்காவுக்கு சிகாகோ சர்வ மத மகாசபையில பேசுவதற்கு அனுப்பிடணும்னு ஹிந்து மதம் சார்பா பேச, சும்மா பசங்களை எல்லாம் மதியானம் ஆனால் போதும் கூட்டிக்கிட்டு எல்லா இடத்துலயும் போயி வீடு வீடா பணம் வசூலிக்க ஆரம்பிச்சுட்டாரு, கப்பல்ல அனுப்பற செலவுக்கு.

அத்தனை பேரும் அவரைப் பேசி சம்மதிக்க வச்சி.. அவரா என்னடான்னா நான் எங்கய்யா போறது நானே ஊர் சுத்தற சந்நியாசி எங்கிட்ட ஏது காசு பணம் வசதில்லாம் கண்டம் விட்டுக் கண்டம் போகன்னு பார்ப்போம் கடவுள் சித்தம் இருந்தா எல்லாம் தானா நடந்துட்டுப் போவுதுன்னு இருந்தாரு…

எல்லாம் ஒரு வழியா அவரை ஏத்திவிட்டு கப்பல்ல அனுப்பிச்சா அங்கப் போனா அமெரிகாவுல.. சபை கான்ஃபரன்ஸ் கூட்றதுக்கு 2, 3 மாசம் முன்னாடியே வந்துட்டாரு…பார்த்தா கையில் இருக்கற காசெல்லாம் ஏகப்பட்ட செலவு நாளைக்கும்…பணமா கரையுது.. என்னடா இது பசங்க சொல்றதைக் கேட்டு நாமளும் சரியா விசாரிகாம வந்துட்டமேன்னு…சரி கடவுள்விட்ட வழின்னு.. என்ன என்னவோ கஷ்டம்.. பாவம்….பார்த்தா தெய்வக் கருணை யார் யாரோ முன்னைப் பின்ன தெரியாத்வங்க எல்லாம் ஃப்ரெண்ட்ஸாக ஆகி…

கடைசியில சிகாகோவுல சர்வ மத சபை கூடுது… அங்க வந்திருக்கற ஆளை எல்லாம் பார்த்தா… எல்லாம் உலகத்துல பல மூலைகளேந்து வந்துருக்காங்க…..காத்தாலேந்து பேசு பேசுங்கறாங்க… இவருக்கா.. உள்ள பயம் பிடிச்சிக்குச்சு… என்னடா பேசப் போறோம் நாம…அவன் அவன் என்னாடான்னா ஏகப்பட்ட தடிதடியா கையில நோட்டுப் புத்தகம் எழுதி ரெடியா வந்திருக்கான்…நாம என்னாடான்னா நம்ம ஊருன்னு நினைச்சுக்கிட்டு மரத்தடியில பேசறா மாதிரி வெறும வந்து நிக்கறோம்…ஒரே உள்ள உதறுது…

பார்த்தா கடைசில அந்த சபைத் தலைவரே என்னடா இது பேசப் போறாரா இல்லையா… இதான் லாஸ்ட் சான்ஸ் இல்லைன்னா இன்னிக்கு கதைஅயி முடிச்சிக்க வேண்டியதுன்னு சொல்லி..என்னங்க இதான் கடைசி பேச வரீங்களான்னதும்…. ஒரு வேகம்….மனசுல குருநாதரை நினைச்சுக்கிட்டாரு,.,, சரஸ்வதியை நினைச்சுக்கிட்டாரு….விடுவிடுன்னு போய் நின்னாரு….என்னத்தை பேசினாரோ எதைப் பேசினாரோ… பார்த்தா அத்தனை மக்களும் சீட்டை விட்டு எழுந்துக்கினு நின்னு ஒரே கைதட்டல் கரகோஷம்….ஓயமாட்டேந்ங்குது/…

ஆங்..பேசிட்டாரு….அன்னிக்கு..?.

பேசிட்டாரா.. அன்னிலேந்து அவருதான் சூப்பர்ஸ்டார்…..அமெரிகக முழுக்க…அவரு  சும்மா மேடைல நடந்து போனால் போதும் எல்லா ஜனமும் எழுந்து கைதட்டுது, அவர் பேசறார்னா நாள் முழுக்க காத்துக் கிடக்குது… என்ன அதுவரைக்கும் என்ன நினைச்சாங்க அமெரிகக இங்கிலாந்து போல தேசங்கல்ள சரி இந்தியர்கள்னா என்ன கல்வி இருக்கு பண்பாடு என்ன இருக்கு எல்லாம் அடிமை நாடுகள், ஆளுங்க பார்த்தா காட்டுமிராண்டி மாதிரி இருககங்க.. இவங்க கிட்ட என்ன சிறப்பு இருக்கப் போகுது..ன்னு. ஆனால் விவேகாநதரு பேசினபப்றம் ஒன்று தெரிஞ்சுக்கிட்டாங்க…சரி நாம யாரையும் சரியா தெரிஞ்சுக்காம எடை போடக் கூடாது…அம்மாடி எவ்வளவு உயர்ந்த தத்துவங்கள், கருத்துகள், என்னமா இவௌரு பேசறாரு.. இப்படி பட்டவங்கெல்லாம் அந்த நாட்டுல பிறந்து வளர்ந்து வந்திருககங்கன்னா அந்த நாட்டுப் பண்பாடு அப்படி இல்லாம இப்படி எல்லாம் முடியுமா? அது மட்டுமில்ல…சென்னைதான் முதல்ல அவரைக் கண்டுக்கிட்டு.. சரி இப்படிப் பட்ட பெரிய ஆளு இவுருன்னு இவங்க அனுப்பிச்சு,, பேரும் புகழும் ஏற்பட்ட பிற்பாடுதான் அவுரு பிறந்த வங்காளத்துலயே எல்லாம் இவரைத் திரும்பிப் பார்க்குறாங்க. எல்லம் அது வரைக்கும் கண்டுக்காம இருந்தாங்க…யாரோ காளிகோயில் பூசாரி, இந்தப் பசங்க படிப்பு வீடு வாசலை விட்டுட்டு அவரு கூட சுத்திக்கிட்டு வீட்டுக்கு அடங்காமன்னு அப்ப்டிதான் நினைப்பு…ஆனால் சென்னை அவரைப் பெரிய மகான்னு தெரிஞ்சுக்கிட்டு அனுப்பிச்ச பிற்பாடு சும்மா இந்தியாவுக்கே நல்ல காலம். ஏன்னா அவரு இந்தியாவுல வந்து பேசி அந்தப் பேச்சுனாலதான் சுதேசிய இயக்கமே வந்துது நாட்டுல. சுதாசி இயக்கம் வரவுட்டுத்தான் 1906ல, இந்தியாவுக்கு சுதந்திரம் 1947ல கிடைக்குது. நம்ம நாட்டு சுதேசிய எழுச்சியின் தந்தைன்னு சொல்லணும்னா விவேகாநந்தர்தான்.

சார்! பெரிய வெசயம் சார்…இல்லை இன்னிக்குப் போனா இவனால அவனால வெளிநாட்டுல இந்தியாவுக்குத் தலைகுனிவு, அப்படி இப்படிங்கறாங்களே..பாருங்க அவரு பேசின நாள்லேந்து இந்தியாவையே அவுங்க நிமிர்ந்து பார்க்க ஆரம்பிசுட்டாங்கன்னு..அதான் சார் வேனும்…சார் இங்க ரைட்டா லெஃப்டா?

இந்த ரைட்டை விட்ரு அடுத்த ரைட்டு..ஹாங் அதான்.. அப்படியே அந்த ஸ்கூட்டர் நிக்குது பார் அந்தக் கேட்டுதான். எவ்வளவு ஆச்சி? …

அதெல்லாம் கரெக்ட் மீட்டர் சார்…. ஏன் ஜாஸ்தியா இருகக சார்…

இல்ல கொஞ்சம் சுத்தி வந்தமுல்ல…

ஆனால் அது பெரிய விசயம் சார்…

ஆங்… அதான்..சரி ரொம்ப தேங்க்ஸ்பா….

வரேன் சார்…

இப்படி ஆரம்பித்திருக்கிறது புத்தாண்டு கொண்டாட்டத்தின் முற்றப் பொழுது, எனக்கு !

29 thoughts on “யாரு சார் இவரு?

  1. விவேகானந்தரைப் பற்றி விரிவாக ,சிகாகோ சொற்பொழிவு வரை , இதைவிட சுலபமாக புரிகிற மாதிரி யாராலும் சொல்ல முடியாது ரஞ்சனி. உங்களின் மெட்ராஸ் தமிழ் நடையை மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்….

    1. வாங்க ராஜி!
      இது நான் எழுதியது இல்லை. ஆனால் நான் மிகவும் ரசித்துப் படிக்கும் திரு மோகனரங்கன் அவர்கள். அவரது அனுமதி பெற்று ஈங்கு பிரசுரித்து இருக்கிறேன். உங்கள் பாராட்டுக் அவருக்கு.
      நன்றி!

  2. மிகவும் அருமையான அழகான நேர்த்தியான சூப்பரான பதிவு. ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதால் மற்றொரு கண்ணால் மட்டுமே மிகவும் கஷ்டப்பட்டுப்படித்தேன். இருப்பினும் என் கண்களைத்திறந்த அற்புதமான பதிவாக எழுதியுள்ளீர்கள். பாதியில் நிறுத்தவே முடியாத பரவஸம் மிக்கப் பதிவாக எழுதியுள்ளீர்கள்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் இனிய நன்றிகள்..

    1. //இதை எழுதியவர் திரு மோகனரங்கன் V. ஸ்ரீரங்கம் .//

      அவருக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

      விவேகாநந்தரைப்பற்றி தாங்கள் ஏதோ ஸ்பெஷல் அஸைன்மெண்டில் தீவிரமாக மூழ்கியிருப்பதாக முன்பு ஒருநாள் ஏன்னிடம் சொன்னீர்கள் அல்லவா! அதனால் ‘அது இது தானோ’ என நினைத்து விட்டேன்,

      ’‘படித்ததில் பிடித்தது’ என்பதை இப்போது தான் கவனித்தேன். எனினும் பகிர்வுக்கு நன்றிகள்.

      அன்புடன் VGK.

      1. வாங்க கோபு ஸார்!
        சரியாகப் புரிந்துகொண்டதற்கு நன்றி!
        கண்ணில் ஏதோ பிரச்னை என்கிறீர்களே, பார்த்துக் கொள்ளுங்கள், ப்ளீஸ்!

  3. இனிய வாழ்த்து.
    பாதி வாசித்தேன் பழக்கமற்ற மொழியால்.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    1. வாருங்கள் வேதா.
      மெட்ராஸ் பாஷை படிக்க கஷ்டமாக இருந்ததோ?
      வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  4. அற்புதமான பதிவு
    அருமையான விஷயத்தை எளிமையாகச்
    சொல்லிப்போனவிதம் மிக மிக அருமை
    படித்து ரசித்ததை எங்களுக்கும் பகிர்ந்து
    அறியச் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி

  5. எங்களையும் ஆட்டோவில் ஏற்றி விவேகானந்தருடன் சிகாகோ எல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சென்னையில் கொண்டுவந்து விட்ட மாதிரி இருந்தது திரு மோகனரங்கன் V. ஸ்ரீரங்கம் அவர்களின் பதிவு. பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிங்க.

    உங்க மெட்ராஸ் பாஷையில் ஒரு முழு பதிவையும் போட்டு அசத்துங்களேன்.

    1. அச்சச்சோ ஸ்ரீராம்! இது நான் எழுதியது அல்ல, அல்ல, அல்ல. படித்ததில் பிடித்தது. எழுதியது திரு மோகனரங்கன்.
      உங்கள் பாராட்டுக்களை அவருக்குத் தெரிவிக்கிறேன்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    1. வாங்க தனபாலன்,
      இது நான் எழுதிய பதிவு இல்லை என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  6. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இதை பதிவாக வெளியிட்ட தங்களுக்கு என் நன்றிகள்!
    நானும் இதை என் முக புத்தகத்தில் வெளியிட்டு யான் பெற்ற இன்பத்தை சகல நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்க போகிறேன்!

    1. வாங்க மஹா!
      வருகைக்கும் முகநூலில் பகிர்ந்தமைக்கும் நன்றி!

  7. நீங்க கீதையைப் படிக்கறதை விட கால்பந்து விளையாடுங்க…மோக்ஷத்துக்கு இன்னும் உங்களுக்கு தகுதி ஏற்படும்னாரு..

    சிக்காகோவுக்கே ஆட்டோவில் மீட்டர் போட்டு
    அழைத்துச்சென்றமாதிரி
    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

    1. வாங்க இராஜராஜேஸ்வரி!
      வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

  8. election taiththulE yaar oorvalam vanthaalum maruvaathayaa irukkanum.
    solliputten.
    neenga vivek aa saar. !! adada… En sar aalE maari poyitteeka. ??
    eppadi irunthavanga eppadi aayitteeka..?
    sarithaan.
    antha santhanam vanthapuram ungalukku ambuttu chance illainnu
    intha field kku vanthutteeka. pola.
    engirunthaalum vaazka.

    subbu thatha.

    1. வாங்க சுப்பு தாத்தா! யாரு ஆளே மாறிப்போயிட்டாரு?
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  9. எளிமையான நடையில் விவேகானந்தரை பற்றி பிரமாதமாக சொல்லியிருக்கார்…

    அருமை.. பாராட்டுகள்.

    1. வாங்க ஆதி!
      வருகைக்கும், கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!

  10. மிகவும் வித்தியாசமான,எளிய விவேகானந்தர் பற்றிய விளக்கம் ! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா. இந்தியாவில் சுதேச இயக்கம் தோன்ற விவேகானந்தர் தான் காரணம் என்பதை நினைக்கையில் உடல் சிலிர்க்கிறது ! அவர் பேசிய சிகாகோ சொற்பொழிவின் ரெக்கார்டட் ஆடியோ இணையத்தில் கிடைக்கிறது ! அவர் குரல்,அவர் பேசும் த்வனி, அவர் பேச்சின் சாராம்சம் ! சிங்க கர்ஜனை !!! வீரத்துறவி !!!! 🙂 கிறித்தவ மிசனரிகள் இந்தியாவில் வறுமையை,ஏழ்மையை காரணம் காட்டி சேவை எனும் பெயரில் மதம் பரப்பும் செயலை தன் அமெரிக்க பேச்சில் “இந்தியாவின் தேவை மதம் அல்ல” ஒரு தின உரையாகா கொடுத்திருப்பார் !

  11. ”எவ்ளோ பெரிய மாத்ரே!”

    அசத்தாலான பதிவு. உங்கள் உழைப்பு இதில் தெரிகிறது.
    நன்றி

  12. விவேகானந்தரை பற்றி அருமையான கருத்துக்கள் எளிமையான நடையில்! கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

Leave a comment