சென்னைக்கு இன்று 374 வயது

                                                    madras 2

இன்று ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம். சென்னைக்கு இன்று 374 வயது.

நாமும்  சேர்ந்து  கொண்டாடுவோமா….!!

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது.

அதை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம் வாருங்கள் …..

கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர்.

இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது. சென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இது அமைந்தது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது.

அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை இப்போது உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் 1639 ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்துதான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும் பின்னர் நகரத்தோடு இணைந்த திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது.

புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை போதித்ததாக கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது. 1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.

ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது.

1688 ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.

1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது.

சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.

வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை பிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அன்றிலிருந்து அழைக்கப்படுகிறது.

நானும் உங்களுடன் சேர்ந்து சென்னை பிறந்த தினத்தை  கொண்டாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தகவல்/நன்றி  திரு அனந்தநாராயணன்

மேலும் படிக்க : Chennai day by Dr. Rajanna

 

19 thoughts on “சென்னைக்கு இன்று 374 வயது

  1. வணக்கம்
    அம்மா

    சிங்காரச்சென்னை மாநாகரின் 374 வது வயது பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாட எனது வாழ்த்துக்கள் சிறப்பாக வரலாற்று கோப்புகளை பதிவு செய்துள்ளீர்கள் பாராட்டுக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    1. வாருங்கள் ரூபன்!
      வருகைக்கும் படித்து கருத்துரை கொடுத்ததற்கும் நன்றி!

    1. வாருங்கள் மஹா!
      வருகைக்கும் பிறந்தநாள் வாழ்த்திற்கும் நன்றி!

    1. வாருங்கள் தனபாலன்!
      ரொம்பவும் ஆசைப்படுகிறீர்களே! இப்போதுதானே 374 வயது ஆகியிருக்கிறது! 🙂

  2. கர்னாடகாவில் இருந்து கொண்டு தமிழ் நாட்டின் தலை நகரை விவரித்து பிறந்த நாள் கொண்டாடியதற்கு சந்தோஷம்
    வாழ்க சென்னையின் சிறப்புகள் வளர்க அதன் பெருமைகள் உங்களுக்குப் பாராட்டுக்கள்

    1. வாருங்கள் விஜயா!
      சென்னை என்றாலே மனதில் ஒரு உற்சாகம் தான்! வெய்யிலைத் தவிர!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    1. வாருங்கள் ரிஷபன்!
      வருகைக்கும் பிறந்தநாள் வாழ்த்திற்கும் நன்றி!

  3. சென்னையின் வரலாற்றை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. இந்த சென்னை தமிழ்தான் எனக்கு காதல் கடிதப் போட்டியில் பரிசு பெற உதவியது .நன்றி அம்மா.

    1. வாருங்கள் முரளி!
      உங்கள் சென்னை தமிழ் காதல் கடிதம் எங்களையும் கவர்ந்துவிட்டது.
      வருகைக்கும் நீங்கள் கொடுத்த பட்டத்திற்கும் நன்றி!

    1. வாருங்கள் ராஜி!
      உங்களுக்கும் சென்னை மனசு துள்ளுமா?
      வருகைக்கும் பிறந்தநாள் வாழ்த்திற்கும் நன்றி!

  4. சென்னையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எனக்கும் மகிழ்ச்சி.இரண்டு மூன்று நாட்களாக செய்தித்தாள்களில் இதைப் பார்த்து வருகிறேன்.இதன் வரலாற்றைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சிங்க.

    1. வாருங்கள் சித்ரா!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்கோ! ராஜி ஏதோ கேட்கறாங்களே!

Leave a comment