உலக இசை தினம்

உலக இசை தினம் இன்று. எனக்கு மிகவும் பிடித்த இளைய ராஜாவின் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை இசைப்பாவில் கேளுங்கள்.

உலக இசை தினம் 2013 இன்று (21 ஜூன்).  மனம் கனிந்த வாழ்த்துகள். இசை என்றால் தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் மக்கள் வாழும் இடங்கள் அனைத்திலும் ஒரே தேவன் தான் : ராக தேவன் ராஜா. அவரின் தலை சிறந்த பாடல்களில் ஒன்றை, இங்கு பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறோம். சுவாசம் போல நேசம், இசை எல்லா(ம்) தேசம்  !

இந்த வரிகள் இசைப்பா தளத்தின் பங்களிப்பாளர் திரு ஓஜஸ் அவர்களால் எழுதப்பட்டவை.

இனி, நான் இந்தப் பாடல் குறித்து எழுதியது:

இளைய ராஜாவின் பிறந்த நாள் வாரத்திலேயே வந்திருக்க வேண்டிய பாடல் இது. தாமதமாகிவிட்டது. ஆனால் இசைஞானியின் பிறந்த நாள் அன்று மட்டுமில்லை என்றைக்கும் கேட்டு மகிழக் கூடிய பாடல் இது.

தளபதி படப் பாடல்; எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி குரலில் உள்ளத்தையும், உணர்வுகளையும் குளிர வைக்கும் பாடல்.

பாடலின் வரிகளும், இசையும் போட்டிபோடும் இந்தப் பாடலில். வரிகள் ஒவ்வொன்றும் காதலின் உண்மை பேசும். வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதை வருடும்.

பாடலை இங்கு கேட்டு மகிழுங்கள்