ஒரு நேர்முகம் – செல்வ களஞ்சியமே – 25

interview

செல்வ களஞ்சியமே – 25

4பெண்கள் தளம் ஆரம்பித்து நாங்களே கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில்தான் ரஞ்சனி, ஆர்வத்தோடு தன்னுடைய பங்களிப்பை ஆற்ற விரும்புவதாக சொன்னார். நாங்கள் 4பெண்கள் தளம் ஆரம்பித்ததற்கான நோக்கமும் அதுதான். எழுத்தார்வமும் தன்முனைப்பும் உள்ள பெண்கள் பல்வேறு விஷயங்களை எழுத ஊக்குவிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்கு ஒரு தொடக்கமாக அமைந்த ரஞ்சனி நாராயணன். அவர் எழுதிய முதல் தொடரான ‘செல்வக் களஞ்சியமே’ 25 பகுதிகளை நிறைவு செய்திருக்கிறது. அதையொட்டி அவருடன் நடத்தப்பட்ட ஒரு உரையாடல் இதோ…

என்னுடைய நேர்முகம் தொடர்ந்து படிக்க: சென்சார் இல்லாத இணையம் 

செல்வ களஞ்சியமே – 24

நோய்நாடி நோய் முதல் நாடி – 2

headache

முதல் பகுதி 

எனது முன்னுரையில் ‘தனி மனிதனின் ஆரோக்கியம் அவன் வாழும் சமுதாயத்திற்கு அவன் தன்னை சார்ந்த சமூகத்திற்குச் செய்யும் உதவி’ என்று சொல்லியிருந்தேன்.

ஒருமுறை ஆரோக்கிய பாரதம் (பொதிகை தொலைக்காட்சி தினமும் மாலை 7.30மணியிலிருந்து 8 மணி வரை) நிகழ்ச்சியில் மருத்துவர் ஒருவர் காச நோய் பற்றிப் பேசும்போது சொன்னார்:

‘காச நோய்க்கான மருந்துகளை தவறாமல் மருத்துவர் குறிப்பிடும் நாள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த நோயை மறுபடி அண்டவிடாமல் செய்ய முடியும். ஆனால் உண்மையில் நோயாளிகள் அப்படிச் செய்வதில்லை. முதல் மூன்று மாதங்கள் மருந்து சாப்பிட்டுவிட்டு ‘எனக்கு சரியாகிவிட்டது;இனிமேல் மருந்துகள் தேவையில்லை என்று நோயாளிகள் அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் நோய்க் கிருமிகள் உள்ளேயே இருக்கின்றன. நோயாளிகள் இருமும் போதும், எச்சிலை தெருவில் உமிழும் போதும் இந்த நோய்க் கிருமிகள் மற்றவர்களுக்குப் பரவுகின்றன.அதுமட்டுமில்ல; மருந்துகளை தொடர்ந்து எடுக்காமல் மறுபடி நோய் அறிகுறி வரும்போது மட்டும் சாப்பிடுவதால் அவர்களது உடம்பில் மருந்துகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை குறைகிறது. இதனால் மருந்து உட்கொண்டும் பயனில்லாமல் போகிறது.’

தொடர்ந்து படிக்க: தலை வலி ஏன் வருகிறது?

கவியரசருக்கு ஒரு நினைவஞ்சலி

கண்ணதாசன்

இன்று கண்ணதாசன் பிறந்த நாள். இவர் எழுதிய பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதிலிருந்து சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

முதல் பாடல்:

பலே பாண்டியா படத்தில் வரும் ‘அத்திக்காய் காய் காய்’

ஒவ்வொரு வரியிலும் வரும் ‘காய்’ என்ற சொல்லுக்கு இடத்திற்குத் தகுந்தாற்போல பொருளும் மாறும். அதுதான் இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.

இரண்டாவது பாடல்:

கர்ணன் படத்தில் வரும் ‘மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா’

கீதையின் சாரத்தை எளிய வரிகளில் பிழிந்து தந்திருப்பார்.

மூன்றாவது பாடல்:

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

இந்தப்பாடல் பற்றிய என் பதிவு இங்கே 

 

இன்னும் நிறைய பாடல்கள் சொல்லலாம்.

கண்ணதாசன் இந்தப் பாடல்கள் வழியே நம் நெஞ்சில் என்றும் இருப்பார்.

மிகப் பெரிய கலைஞனுக்கு ஒரு சிறிய அஞ்சலி.

குழந்தைகளும் அலைபேசியும்!

baby with cell phone

செல்வ களஞ்சியமே – 24

முதல் பேரன் பிறந்த போது ஒருநாள் குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. என் மகள் பக்கத்தில் கட்டிலில் படுத்துக் கொண்டு ஏதோ படித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று தொட்டிலின் மேல்  கட்டித் தொங்கவிட்டிருந்த  கிலுகிலுப்பை சத்தம் போட்டது. கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் கிலுகிலுப்பை சத்தம். வந்து பார்த்தால் குழந்தை காலால் தொட்டிலை உதைத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை உதைக்கும்போதும் கிலுகிலு சத்தம். கூடவே குழந்தையின் சிரிப்பொலியும்.

‘குழந்தை புது விளையாட்டுக் கற்றுக் கொண்டு விட்டான்’ என்று சந்தோஷமாக மகளிடம் கூறினேன். பார்க்கிறவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி, என் அம்மாவுக்குக் என் பேரனின் விளையாட்டுப் பற்றிக் கடிதம் எழுதி….

இக்கட்டுரையை தொடர்ந்து படிக்க  நான்குபெண்கள் தளத்திற்குச் செல்லவும். கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கவும்

சில தாய்மார்கள் குழந்தைகளுடன் போதிய அவகாசம் செலவழிக்க முடியாமல் தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் குழந்தையை விட்டுவிடுகிறார்கள். சில அம்மாக்கள் அலைபேசியை அதனிடம் கொடுத்துவிடுகிறார்கள்.

இரண்டுமே குழந்தைக்கு அபாயத்தை விளைவிக்கும்.

இதுபற்றி தொடர்ந்து படிக்க: குழந்தையிடம் செல்போன் தரலாமா?

செல்வ களஞ்சியமே – 23

உலக இசை தினம்

உலக இசை தினம் இன்று. எனக்கு மிகவும் பிடித்த இளைய ராஜாவின் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை இசைப்பாவில் கேளுங்கள்.

உலக இசை தினம் 2013 இன்று (21 ஜூன்).  மனம் கனிந்த வாழ்த்துகள். இசை என்றால் தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் மக்கள் வாழும் இடங்கள் அனைத்திலும் ஒரே தேவன் தான் : ராக தேவன் ராஜா. அவரின் தலை சிறந்த பாடல்களில் ஒன்றை, இங்கு பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறோம். சுவாசம் போல நேசம், இசை எல்லா(ம்) தேசம்  !

இந்த வரிகள் இசைப்பா தளத்தின் பங்களிப்பாளர் திரு ஓஜஸ் அவர்களால் எழுதப்பட்டவை.

இனி, நான் இந்தப் பாடல் குறித்து எழுதியது:

இளைய ராஜாவின் பிறந்த நாள் வாரத்திலேயே வந்திருக்க வேண்டிய பாடல் இது. தாமதமாகிவிட்டது. ஆனால் இசைஞானியின் பிறந்த நாள் அன்று மட்டுமில்லை என்றைக்கும் கேட்டு மகிழக் கூடிய பாடல் இது.

தளபதி படப் பாடல்; எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி குரலில் உள்ளத்தையும், உணர்வுகளையும் குளிர வைக்கும் பாடல்.

பாடலின் வரிகளும், இசையும் போட்டிபோடும் இந்தப் பாடலில். வரிகள் ஒவ்வொன்றும் காதலின் உண்மை பேசும். வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதை வருடும்.

பாடலை இங்கு கேட்டு மகிழுங்கள்

புதிய தொடர் ஆரம்பம்

health image

 

போன மாதம் தும்கூர் போயிருந்தேன். கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. மருத்துவரிடம் போனேன். கூட்டமோ கூட்டம். உட்காரக் கூட இடம் இல்லை. எனக்குக் கிடைத்த டோக்கன் எண் 21. ‘இப்போதுதான் 9 ஆம் டோக்கன் உள்ளே போயிருக்கு’ என்றார் அங்கே காத்திருந்த ஒரு பெண்மணி. மருத்துவ மணிக்குள்ளேயே இருந்த  மருந்துக் கடைக்காரர் என்னைப் பார்த்துவிட்டு, ‘இங்க வாங்கம்மா’ என்று சொல்லி ஒரு சின்ன ஸ்டூலைப் போட்டு உட்காரச் சொன்னார். வயதானால் இது ஒரு சௌகரியம்!

9 ஆம் நம்பர் வெளியே வந்தார். மிகவும் சிறிய வயது. காலில் ஏதோ அடி. மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து வகைகள் ஒவ்வொன்றிலும் 5 கொடுங்கள் போதும் என்று வாங்கிக் கொண்டார். வசதி இல்லாதவர், அதிகம் படிக்காதவர் என்று அவரது நடை உடை பாவனைகளிலிருந்தே தெரிந்தது. பாவம் என்ன உடம்போ என்று நினைத்துக் கொண்டேன்.

ஒவ்வொருவராக மருத்துவரின் அறையிலிருந்து வெளியே வந்து, மருந்துக் கடைக்காரரிடம் மருத்துவர் சொன்ன மருந்துகளில் பாதி அளவே வாங்கிக் கொண்டு போனார்கள். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. சில மருந்துகள் மருத்துவர்கள் சொல்லும் அளவிற்கு கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் – குறிப்பாக anti- biotic மருந்துகள்.

இவர்களுக்கெல்லாம் யார் சொல்வது இதை என்று ஆயாசம் ஏற்பட்டது.

 

நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம் தேவை. என்னால் முடிந்தது நான் படிக்கும் மருத்துவக் கட்டுரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது.

நான்கு பெண்கள் தளத்தில் வரும் புதன்கிழமையிலிருந்து மருத்துவம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும், செய்திகளையும் எழுத இருக்கிறேன்.

இந்தக் கட்டுரைக்கான முன்னுரையை கீழே இணைப்பில் படிக்கலாம்.

நோய்நாடி நோய்முதல் நாடி

அப்பாவாகப் போறீங்களா?

happy father's day!

குழந்தை பிறக்கப் போகிறது என்றால் எல்லோருமே தாயாகப் போகும் பெண்களுத்தான் யோசனை சொல்வார்கள். தந்தையாகப் போகும் ஆண்களை யாரும் ‘கண்டு’ கொள்ளவே மாட்டார்கள். அவர்களும் ‘பாவம்’ தானே!

ஒரு பெண்ணுக்கு இருக்கக் கூடிய பயங்கள் எல்லாம் ஒரு ஆணுக்கும் இருக்கும். வெளியில் காட்டிக் கொள்வதில்லை அவ்வளவுதான்!

குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் வரப்போகிறார்; ஆணா, பெண்ணா தெரியாது; நல்லவரா கெட்டவரா தெரியாது. யாரைப்போல இருப்பார் தெரியாது; சாதுவாக இருப்பாரா, ரொம்பவும் demanding ஆக இருப்பாரா தெரியாது. தன்னைப் போல இருப்பாரா, தன் மனைவியைப் போல இருப்பாரா, தெரியாது.

இப்படி எதுவுமே தெரியாத ஒருவரை எதிர்பார்த்து 9 மாதங்கள் காத்திருக்க வேண்டும்! அப்பாவாகப் போகிறவர்களுக்கு என்ன ஒரு சோதனை!

பார்க்கிறவர்கள் எல்லோரும் ‘அப்பாவாகப் போறியாமே, வாழ்த்துக்கள்’ என்று கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு போய்விடுவார்கள். யாரிடம் தனது பயங்களைக் சொல்வது? முதலில் தான் பயப்படுவது சரியா? ஆண் என்றால் வாய்விட்டு அழக்கூடாது; அதேபோல பயப்படவும் கூடாது; ஆண் என்றால் வீரமாக இருக்க வேண்டும், இல்லையா? எல்லா ஆண்களுக்கும் இந்த பயங்கள்  இருக்குமா? மனைவியிடம் சொல்ல முடியாது. அவள் கருத்தரித்த நாளிலிருந்து ஒரு புதிய உலகத்தில் இருக்கிறாள். அவளும் அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் மட்டுமேயான ஒரு உலகம்! அதில் இனிமேல் தனக்கு இடம் உண்டா?

ஆண்களின் பயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்:

உறவு பற்றிய பயம்:

பிறக்கப் போகும் குழந்தை தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள உறவை பலப் படுத்துமா? இல்லை இடைவெளி உண்டு பண்ணுமா? இனி தன் மனைவி தன் மேல் முன் போலவே அக்கறை காட்டுவாளா? இல்லை குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்து தன்னை பின்னுக்குத் தள்ளி விடுவாளா? இத்தனை நாள் மனைவியுடன் தான் அனுபவித்து வந்த உறவு என்னாகும்?

உண்மையில், குழந்தை உங்கள் இருவருக்கும் ஒரு பாலமாகத் தான் இருக்கும். உங்கள் உறவு இன்னும் பலப்படும். உங்கள் உறவில் புதிய பரிமாணம் உண்டாகும். இருவரும் சேர்ந்து குழந்தையை கவனிக்கும்போது உங்களிருவருக்கும் இடையே புதிய புரிதல் ஏற்படும்.

இரவு பகல் என்று குழந்தையை பார்த்துக் கொண்டாலும், உங்கள் மனைவி உங்களை இப்போது இன்னும் அதிகமாகக் காதலிக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களைவிட குழந்தைக்கு அவள் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனைவி என்ற நிலையிலிருந்து அம்மா என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறாள். அவளுக்கும் அந்த நிலை புதிது. அதற்கும் அவள் தயாராக வேண்டும். உங்கள் இருவரின் தேவையையும் அவள் பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தை 100% அவளைச் சார்ந்து இருக்கிறது. அதனால் அவள் தன் நேரத்தில் பெரும்பாலும் குழந்தையுடன் செலவழிக்க நேரலாம்.

பணவசதி:

‘மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்று இருக்க முடியாது. வேலைக்குப் போகும் மனைவி என்றால், திருமணம் ஆனவுடன் இரட்டை வருமானம் என்று பழகி இருக்கும். இப்போது ஒருவரின் வருமானத்தில் இன்னும் ஒரு நபரையும் கவனித்துக் கொள்வது என்பது கொஞ்சம் சிரமமே. குழந்தை பெற்றுக் கொள்ளத் தீர்மானித்த அன்றிலிருந்து குழந்தைக்கு என்று இருவருமாக சேமியுங்கள். கருத்தரித்த நாளிலிருந்து மனைவிக்கும் செலவழிக்க வேண்டியிருக்கும். சாதாரண பிரசவத்திற்கே இப்போதெல்லாம் ஒரு ‘ல’ கரம் தேவைப்படுவதாக சொல்லுகிறார்கள். மனைவி வேலைக்கு செல்பவராக இருந்தால் கொஞ்சம் மூச்சு விட முடியும். பிரசவத்திற்கு முன் எத்தனை மாதங்கள் வரை அவரால் வேலைக்குப் போக முடியும், பிரசவித்த பின் எப்போது திரும்ப வேலையில் சேர முடியும் என்பதையெல்லாம் கருத்தரித்த உடனேயே சொல்ல முடியாது. அதனால் சேமிப்பு முதலிலிருந்தே ஆரம்பிப்பது மிக மிக அவசியம்.

பிரசவத்தின் போது மனைவியுடன் இருக்க வேண்டுமா / முடியுமா?

நம் நாட்டில் பிரசவத்தின் போது மனைவியுடன் கணவனும் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிலை இன்னும் வரவில்லை. நம் மருத்துவர்களும்  கட்டாயப்படுத்துவது இல்லை. அதனால் பயம் தேவையில்லை. இங்கிருந்து வெளிநாடுகளுக்குப் போகும் இளைஞர்களுக்கு அங்கு போனவுடன் தைரியசாலிகளாகிவிடுகிறார்கள்.

மனைவி படும் வலியைத் தாங்குவதை விட, அந்தச் சமயத்தில் வெளியேறும் இரத்தத்தைப் பார்க்க அசாத்தியமான மனோதிடம் வேண்டும். உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் மறுத்து விடுங்கள்.

பிறக்கப் போகும் குழந்தைக்கோ மனைவிக்கோ ஏதாவது  நேர்ந்துவிடுமோ என்ற பயம்.

மனைவியின் ஆரோக்கியம், வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் இரண்டையும் பற்றி மருத்துவரிடம் சரியான முறையில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் மனைவியுடன் மருத்துவரைப் பார்க்க செல்லுங்கள். உங்களுக்கு வரும் எல்லா சந்தேகங்களையும் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

சிலருக்கு தனக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று கூட பயம் வரலாம். அனாவசிய பயங்கள் வேண்டாம்.

பெண் மருத்துவர், பெண் நோய்கள், பெண் மருந்துகள் பற்றிய பயம்

இந்த மாதிரியான பயங்களுக்கு முக்கிய காரணம் கருத்தரித்தல், பிரசவம், குழந்தை பிறத்தல் இவை பெண்களுக்கு மட்டுமே என்று நினைத்து பல ஆண்கள் ஒதுங்கி விடுவதுதான். அல்லது வீட்டிலிருப்பவர்கள் இதெல்லாம் ‘பொம்பளைங்க சமாச்சாரம்’ என்று சொல்லி கணவன்மார்களை ஒதுக்கிவிடுவார்கள்.

ஆனால் இன்றைய இளம் தந்தைமார்கள் இதைபோல ஒதுங்கி இருப்பதில்லை என்பது ஆறுதலான விஷயம்.

புதிதாக பெற்றோர் ஆகப்போகிறவர்களுக்காக  பயிற்சி முகாம்கள் சில மருத்துவ மனைகளில் நடத்துகிறார்கள். பிரசவம் என்பது என்ன, எப்படி குழந்தையை தூக்க வேண்டும், எப்படி உடை, டயபர் மாற்ற வேண்டும், எப்படி குழந்தையை தூங்கப் பண்ணுவது என்றெல்லாம் சொல்லித் தருகிறார்கள் இந்தப் பயிற்சி முகாம்களில். மனைவியை மட்டும் அனுப்பாமல், நீங்களும் சென்று எல்லாவற்றையும் பார்த்து வாருங்கள்.

பிரசவம் பற்றிய காணொளிகளை மனைவியுடன் உட்கார்ந்து கொண்டு பாருங்கள். அவள் சாப்பிடும் மருந்து, ஆகாரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  அவளுக்கு எல்லாவிதத்திலும் உதவுங்கள்.

மருத்துவ மணிக்குப் போகும் முன் என்னென்ன தேவை என்று நீங்களும் சேர்ந்து உட்கார்ந்து எல்லாவற்றையும் தயார் செய்யுங்கள்.

வெளியூரில் இருந்தால் விடுமுறை எடுத்துக் கொண்டு பிரசவ சமயத்தில் மனைவியுடன் இருந்து அவளை மருத்துவ மனைக்கு அழைத்துப் போகலாம்.

தாய் ஆவது எப்படி ஒரு பெண்ணுக்கு முழுமையை கொடுக்கிறதோ அதேபோலத்தான் தந்தை ஆவதும் ஆணுக்கு வாழ்வில் புதிய உறவினை அறிமுகப் படுத்துகிறது.

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

 

ஒரு தந்தையின் எண்ணங்கள்: திரு நிக்கி ஜாக்சன் அவர்களின் உணர்வுகளைப் படியுங்கள்

குழந்தையின் 3 -வது மாத வளர்ச்சி

செல்வ களஞ்சியமே – 23

மூன்று மாதங்கள் என்பது குழந்தையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் எனலாம். இப்போது குழந்தையின் தூக்கம், உணவு, விளையாட்டு எல்லாமே ஓரளவுக்கு ஒரு ஒழுங்குமுறைக்கு வந்திருக்கும். வீட்டில் இருக்கும் எல்லோருமே ‘அப்பாடி, குழந்தைக்கு மூன்று மாதம் ஆகிவிட்டதா?’ என்று ஆசுவாசமாய் கேட்பார்கள். அம்மாவிற்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கும். கழுத்து எலும்புகள் கெட்டிப்பட்டு தலை நன்றாக நின்றிருக்கும். இப்போது குழந்தையை எடுப்பது, நீராட்டுவது எல்லாமே கொஞ்சம் சுலபமாக இருக்கும். அம்மாவைத் தவிர மற்றவர்களையும் குழந்தை அடையாளம் கண்டுகொள்ள ஆரம்பிக்கும்.

அழைப்பு மணி அடித்தவுடன், ‘பக்கத்தாத்து மாமி வந்திருக்கா பாரும்மா. கதவுக்கு வெளியே அந்த மாமி பேசறது நம்மாத்துக்குள் கேட்கிறது’ என்று மனதிற்கு நினைத்துக் கொள்ளும். பார்வை நிலைப்பட்டு உங்கள் கண்களைப் பார்த்து சிரிக்கும். நிற்க வைத்துக் கொண்டால் நம் தொப்பை மீது காலை வைத்து சிறிது நேரம் நிற்கும். குப்புறப் படுக்க விட்டிருந்தால் தலையைத் தூக்கிப் பார்க்கும். ஒரு கையை தூக்கி  இன்னொரு கையால் அந்தக் கையைப் பிடிக்கப் பார்க்கும். அப்படியே வாய் வரை கொண்டுவந்து வாய்க்குள் போட்டுக் கொள்ளும். ஏதாவது விளையாட்டுப் பொருள் கொடுத்தால் கெட்டியாக பிடித்துக் கொள்ளும். கைப்பிடி வலுவாக இருக்கும். கையில் எந்த சாமான் அகப்பட்டாலும் நேராக வாய் அருகே கொண்டு போகும். எல்லாக் குழந்தைகளுக்கும் இந்தப் பழக்கம் இருக்கும். சிலசமயம் தன் தலைமயிரை தானே பிடித்துக் கொண்டு  விடத்தெரியாமல் அழும்!

 

தொடர்ந்து படியுங்கள்: தாய்ப்பால் தவிர வேறு பால் கொடுக்கலாமா?

 

இதன் முன் பகுதி 

குழந்தைகளின் ‘colic’ வலி

செல்வ களஞ்சியமே – 22

சமீபத்தில் செய்தித் தாளில் வந்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டு பிறகு குழந்தையின் வளர்ச்சியைப் பார்க்கலாம், சரியா?

குழந்தை இல்லாத தம்பதிகள் IVF முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது தெரிந்த விஷயம்.

IVF பற்றிப் படிக்க:

IVF –  Eeva (Early Embroyo Viability Assessment)

இந்த முறையில் இப்போது time-lapse photography என்கிற புதிய உத்தியின் படி  குழந்தை பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சோதனைச்சாலையில் வளரும் கருமுட்டைகளின் வளர்ச்சியை ஒரு புகைப்படக் கருவி ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுக்கிறது. இதனால் எந்தக் கருவிற்கு குழந்தையாகும் தன்மை அதிகம் என்று துல்லியமாக அறிய முடிகிறது. இந்தமுறையை Eeva (Early Embroyo Viability Assessment) என்கிறார்கள். உலகிலேயே முதல் முறையாக திருமதி ருத் கார்டர் என்பவருக்கு இந்த முறைப்படி ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் ‘Colic pain’ பற்றிக் கேட்டிருந்தார்.

அதைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

 

 

செல்வ களஞ்சியமே – 21