வண்ணத் தொடுவில்லைகள்

நோய்நாடி நோய்முதல் நாடி – 29

 

ஐஸ்வர்யா ராய் தன் அழகால் நம்மை கவர்ந்தார் என்றாலும் அவரது கண்களின் வித்தியாசமான நிறம் எல்லோரையும் கவர்ந்தது என்று சொல்லலாம். 90 களில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் ஆமீர்கானுடன் இவர் தோன்றியபோது இவரது கண்களின் நிறமே மற்றவர்களிடமிருந்து இவரைப் தனித்துக் காட்டியது. எத்தனை பேரால் இவரைப் போல உலக அழகியாக முடியும்? ஆனால் இவரது கண்களைப் போல நம் கண்களையும் மாற்றிக் கொள்ளலாம் – வண்ணத் தொடுவில்லைகள் அணிவதன் மூலம் (color contact lens).

 

இந்த வண்ணத் தொடுவில்லைகள் உங்கள் கண்களின் வண்ணத்தை மட்டுமல்ல, உங்கள் உருவத்தையும் மாற்ற வல்லவை. இவைகளை அணிந்துகொல்லுவதன் மூலம் சாதுவானவர்களை தைரியமானவர்களாக, அல்லது வில்லன், வில்லிகளாக  மாற்றலாம். ஏற்கனவே வில்லன் வில்லி என்றால் சாதுவாகக் காட்டமுடியுமா, தெரியவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வண்ணத் தொடுவில்லைகளை அணிந்துகொண்டு போய் உங்கள் நண்பர்களை அசத்தலாம்.   சாதாரண தொடுவில்லைகளை விட இவை அதிக விலையுள்ளவை. ஆனாலும் இந்த தொடுவில்லைகளை அணிந்து தங்கள் கண்களின் வண்ணத்தை மாற்றிக் கொள்வதை நிறைய பேர் விரும்புகிறார்கள். மேலைநாடுகளில் அவர்களது தோலின் நிறம் வெளுப்பாக இருப்பதால் அவர்களது கண்களும் பச்சை வண்ணத்தில் இருக்கும்.

 

இந்தியர்களாகிய நமக்கு இயற்கையாகவே கருப்பு அல்லது அடர்த்தியான பிரவுன் வண்ணத்தில் கண்கள் அமைந்திருக்கின்றன. இதனால் சற்று அடர்த்தியான வண்ணத் தொடுவில்லைகளை அணிவது பொருத்தமாக இருக்கும். Hazel, amethyst, பிரவுன், க்ரே (சாம்பல் நிறம்) ஆகிய வண்ணங்களில் இந்தத் தொடுவில்லைகள் கிடைக்கின்றன. ஆனால் ஐ. ராய் போல நான் தனித்துத் தெரியவேண்டும் என்று நினைப்பவர்கள் நீலம், பச்சை, வயலட் போன்ற நிறங்களில் கிடைக்கும் தொடுவில்லைகளை அணிந்து மகிழலாம்.

வண்ணத் தொடுவில்லைகளை அணியும்போது கவனிக்க வேண்டியவை:

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்